அதென்னவோ தெரியவில்லை... திறமையான நடிகர் என்று பெயரெடுத்தாலும், அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதே சிம்புவின் வாடிக்கையாகிவிட்டது. தனக்கு திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த இயக்குநர் கவுதம் மேனனையே வேதனைக்குள்ளாக்குகிறார், நல்ல இயக்குநரான பாண்டிராஜை அல்லாட வைத்தார் என சிம்புவைப் பற்றி ஆளாளுக்குப் பலவிதமாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மீண்டும் நயன்தாராவை காதலித்தார், பிறகு விலகினார் என்று 'இது நம்ம ஆளு' படப்பிடிப்பின்போது தகவல் பரவியது. இந்நிலையில், சிம்புவின் திருமணம் எப்போது என்பதற்கு அவரது தந்தை டி.ராஜேந்தர் புதிய பதிலளித்துள்ளார். இரண்டு காதல் தோல்விகளுக்குப் பிறகு சிம்பு தற்போது பெற்றோருக்கு விருப்பமான பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளாராம். தன்னுடைய விருப்பத்தை பெற்றோரிடமும் அவர் தெரிவித்துள்ளாராம். இதையடுத்து சிம்புவுக்கு பெண் தேடும் படலத்தை தீவிரமாக ஆரம்பித்திருப்பதாகக் கேள்வி. இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில் சிம்புவின் தந்தையும் பிரபல இயக்குநருமான டி.ராஜேந்தர், சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.