நடிகர் துஷ்யந்தை நினைவிருக்கிறதா, பிரபுவின் சகோதரர் ராம்குமாரின் மகன். 'மச்சி' என்ற படத்தில் நடித்தவர் பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கிவிட்டார்.இந்நிலையில் புதிய திரைப்பட நிறுவனம் தொடங்கியுள்ள அவர், 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் நாயகன் வேறு யாருமல்ல; அவரது சித்தப்பா பிரபுதான். மேலும், ஆஷ்னா சவேரி, காளிதாஸ் ஜெயராம் (நடிகர் ஜெயராம் மகன்) உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
அமுதேஷ்வர் இயக்க, டி.இமான் இசையமைக்கிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்ய மலேசியா சென்றிருந்த தயாரிப்பாளரும் இயக்குநரும் அங்கு 'கபாலி' படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்திடம் விவரத்தைச் சொல்லி ஆசி பெற்றனர். படத்தின் தலைப்பைக் கேட்ட ரஜினி நன்றாக உள்ளதாகக் கூறியதுடன் சிவாஜி புரொடெக்ஷன்ஸ் போலவே வெற்றிப் படங்களைத் தயாரிக்க வாழ்த்தினாராம்.