‘இனிமேல் பாடமாட்டேன்’

தனது கொஞ்சும் குரலால் தமிழ், மலை­யா­ளம், தெலுங்கு, ஒரியா எனப் பலமொழி மக்­களைக் கவர்ந்த பின்னணி பாடகி எஸ்.ஜானகி (படம்) அவர்கள் பாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிட்­டத்­தட்ட அறுபது ஆண்­டு­கள் 48,000 பாடல்­கள், 4 தேசிய விரு­து­கள், 32 மாநில விரு­து­கள் என அவரது இசைப் பயணம் மிகவும் நெடியது. 1957ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'விதியின் விளை­யாட்டு' படம் ஜான­கியைப் பாட­கி ­யாகத் திரையில் அறி­மு­கப்­படுத்­தி­யது. அதே­ ஆண்­டில் அவர் மலை­யா­ளம், தெலுங்கு படங் களி­லும் பாட­கி­யாக அறி­மு­க­ம் ஆனார். 78 வயதை எட்டியுள்ள ஜானகி, மலை­யா­ளத்­தில் தயா­ரா­கும் '10 கல்­பனை­கள்' (10 கட்­ டளை­கள்) படத்­தில் இடம்­பெ­றும் 'அம்மா பூவினு' என்று தொடங்­கும் பாடலே தன்­னுடைய கடைசிப் பாடலாக இருக்­கும் என்றும் இனி மேல் படங்களி­லும் மேடை­களி­லும் பாடப் போவ­தில்லை என்றும் கூறியுள்ள அவர், தனது பாடகி வாழ்­வுக்கு முழுமை­யான ஓய்வை அறி­வித்­துள்­ளார். ஜான­கி­யின் கடைசிப் பாட­லுக்கு இசை­யமைக்­கும் பேறு, மிதுன் ஈஸ்­வ­ருக்­குக் கிடைத்­து உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!