கிசுகிசுக்களுக்காக வருத்தப் பட்டால் தூங்க முடியாது என்று நடிகை அனுஷ்கா தெரிவித்து உள்ளார். அண்மையில் அளித்த பேட்டி யொன்றில் அனுஷ்கா, "சினிமாவில் நடிக்க வந்த புதிதில் என்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களைப் பார்த்துக் கவலைபட்டு இருக்கிறேன். இதனால் குடும்பத்தினர்களுக்கும் மனக்கஷ்டம் ஏற்பட்டது. ஆனால் இப்போது பக்குவப்பட்டுவிட்டேன். "புகழ்பெற்றவர்கள் இதை எல்லாம் சந்தித்துதான் ஆக வேண்டும் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்கிறேன். உலகம் என்னை பற்றி என்ன பேசுகிறது. "மற்றவர்கள் என்ன நினைக்கி றார்கள் என்று யோசித்துக்கொண்டே வாழ்க்கையை ஓட்டி னால் நிம்மதி இருக்காது.
"அவதூறுகளுக்குக் கவலை பட்டால் அழுதுகொண்டேதான் இருக்கவேண்டும். சினிமாவில் கிசுகிசுக்கள் என்பது சாதாரணம். சொந்த வாழ்க்கையில் அவை தாக்கத்தை ஏற்படுத்துவதும் வழக்கம்தான். எனக்கும் அவை வலியைக் கொடுத்து இருக்கின்றன. ஆனால் அது கொஞ்ச நேரம்தான் இருக்கும். அதன் பிறகு சாதாரணமாகி விடுவேன். "அவற்றை நினைத்துக் கவலை பட்டுக்கொண்டு இருந்தால் நிம்மதியாகத் தூங்க முடியாது. "நம் மீது எந்தத் தவறும் இல்லாதபோது ஏன் வருத்தப்பட வேண்டும்? இந்த உணர்வு எனக்குள் வந்த பிறகுதான் கிசுகிசுக் களை ஓரம் தள்ளிவிட்டு நன்றாகத் தூங்க முடிந்தது. "தமிழ், தெலுங்குப் படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைகின்றன. "கதாபாத்திரங்களும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன. எல்லா படங்களும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன," என்று கூறினார்.