துளசிதாஸ் இயக்கத்தில் முழுக்க முழுக்க பெண்களே நடித்துள்ள 'திரைக்கு வராத கதை' என்ற படத்தில் நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகை நதியா, "நான் நிறைய படங்களில் நடிப்பதில்லை. பிடித்த கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கிறேன். "'திரைக்கு வராத கதை' படத்தில், ஒரு சமூக அக்கறை இருந்தது. இதில் போலிசாக நடித்து இருக்கிறேன். "1984ல் நடிக்க வந்தேன். இத்தனை ஆண்டுகளில் இப்போதுதான் 50வது படத்தை நெருங்கியிருக்கிறேன். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடைவெளி இருப் பதைத் தவறாகப் புரிந்து கொண்டு, நதியா மீண் டும் நடிக்க வந்துவிட்டார் என்பது சரியல்ல. "நடிகைகளுக்கு வயது ஒரு தடையாக அமைந்து விடுகிறது. அதையும் தாண்டி அவர்களுக்கு இளமையான தோற்றம் என்பது ஒரு வரம்.
"நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். நன்றாகச் சாப்பிடுகிறேன். ஆனால் நிறைய சாப்பிட மாட்டேன். வேறு ரகசியம் எது வும் இல்லை. "நான் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த காலத்தில், கதாநாயகிகளுக்கு முக்கி யத்துவம் உள்ள படங்கள் நிறைய வந்தன. "பின்னர் அந்த நிலை மாறி, கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள் வரவில்லை. இப்போது மீண்டும் கதாநாயகியை மையப்படுத்திய படங்கள் வர ஆரம்பித்துள்ளன. "நான் ஒரு சோம்பேறி. நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. நல்ல கதாபாத்திரங்கள் என்னை தேடி வந்தால் மட்டுமே நடிக்கிறேன்," என்று நதியா கூறினார்.