பெற்றோருக்கு பாடம் சொல்ல வரும் புதிய படம் ‘பரமு’

ஏமாறாதே ஏமாற்றாதே என்ற கருத்தை மையக் கருவாக வைத்துத் தயாராகும் புதிய படம் 'பரமு'. இப்படத்தின் கதை, திரைக் கதை, வசனங்களை எழுதி இயக்குபவர் என்.மாணிக்கவேலு. கதாநாயகனும் இவரே. சித்ரா எனும் புதுமுகம் நாயகி யாக அறிமுகமாகிறார். சந்தியா, ரஞ்சித், கார்த்தி, திருப்பாச்சி பென்ஜமின், கோவை செந்தில் ஆகியோரும் நடிக்கிறார்கள். "ஏழை மாணவன் ஒருவனுக் குக் கல்லூரியில் பயிலும் நல்ல வாய்ப்புக் கிடைக்கிறது. தொடக் கத்தில் கல்வியில் கவனம் செலுத்துகிறான்.

"கல்லூரியில் அனைவரிடமும் சகஜமாகப் பழகுகிறான். கூடா நட்புக் காரணமாக அவன் திசை மாறுகிறான். பணத் தேவைக் காகத் தன் குடும்பத்தை ஏமாற்றுகிறான். அதன் விளைவு என்ன என்பதே கதை. "ஏமாறாதே ஏமாற்றாதே என்ற மைய கருவே கதை. பாசமான மகனை நம்பி ஏமாறும் பெற்றோர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இது இருக்கும். "சேலம், ஆட்டையாம்பட்டி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். படப்பிடிப்புகள் முடிவடைந்தது. தற்போது பின் னணி இசை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

'பரமு' படத்தின் ஒரு காட்சியில் மாணிக்கவேலு, சித்ரா, சந்தியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!