'குற்றம் கடிதல்' பட இயக்குநர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா தற்போது நடித்துவரும் படம் 'மகளிர் மட்டும்'. பிரம்மா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருதை வென்ற திரைப்படம் 'குற்றம் கடிதல்'. அதையடுத்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். முழுக்க முழுக்க பெண்களின் பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறாராம். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஜோதிகா நடிக்க, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. முன்னதாக ஜோதிகாவுக்கும், உடன் நடிப்பவர்களுக்கும் நடிப்புப் பயிற்சி அளித்து வந்தார் பிரம்மா. சூர்யாவின் '2டி' நிறுவனம் மற்றும் 'கிரிஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். லிவிங்ஸ்டன், நாசர், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரும் நடிக்கிறார்கள். பெயரிடப்படாமல் இருந்த இப்படத்துக்கு தற்போது 'மகளிர் மட்டும்' என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் முதல் தோற்ற சுவரொட்டியை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’
13 Oct 2016 07:42 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Oct 2016 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!