மிகக் கடினமாக உழைத்ததன் பலனா கவே திரையுலகில் தாம் முன்னேற்றம் கண்டுள்ளதாக நடிகர் சிவகார்த்தி கேயன் கூறியுள்ளார். 'ரெமோ' பட விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தாம் யாருடைய வெற்றியையும் திருடவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அப்படத்தில் பணியாற்றிய அனைத்துக் கலை ஞர்களும் கலந்துகொண்டனர். சிவ கார்த்திகேயன் சில விஷயங்களை மனம் திறந்து பேசினார். "இந்தப் படத்தில் உழைத்த தொழில் நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படத் தின் மூலமாக அனைவரையும் திருப்திப் படுத்தும் ஒரு பொழுதுபோக்குப் படத் தைக் கொடுக்க முயற்சி செய்திருக் கிறோம். இம்முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறோமா என்பதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும். "இதுவரையில் யாரும் எடுக்காத கதை என்று சொல்ல முடியாது. அதே சமயம் மக்கள் ரசிக்கும்படியான யதார்த்தமான படம் 'ரெமோ' என்று தயங்காமல் சொல்லலாம். இதை உரு வாக்க முழுமையாக உழைத்துள்ளோம். "பொதுவாக ஒரு படத்தில் பயணித்த அனைவருக்குமே, 'இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாமே' என்று சொல்லத் தோன்றும். ஆனால், அதைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு நிறை வாக தன் பங்களிப்பைச் செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.