தமிழைவிட தெலுங்குப் படங்களில் ஓய்வில்லாமல் நடித்துகொண்டு இருக்கிறார் சகலகலாவல்லவரான டி.ராஜேந்தர். தமிழ் சினிமாவில் 90களில் எப்படி பரபரப்பாக சுறுசுறுப்பாக படங்களில் நடித்துக்கொண்டு இருந்தாரோ அதைப்போலவே இன்றும் இருக்கிறார் டி.ஆர். தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் டி.ராஜேந்தரும் விஜய் சேதுபதியும் இரட்டை கதாநாயகன் கதையம்சம் உள்ள படத்தில் நடித்து வருகின்றனர். தெலுங்குப் பட வேலையில் இருந்த டி.ராஜேந்தரிடம் தமிழில் அவர் நடிக்கும் படத்தைப் பற்றி கேட்கப் பட்டது. அப்போது, "இயக்குநர் கே.வி. ஆனந்த் எனக்கும் விஜய் சேதுபதிக்கும் சமமான கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார். என் கதாபாத்திரம் பற்றிச் சொல்வதற்கு எனக்கு ஆசைதான் ஒரு படத்துக்கு தலைவர் அதன் இயக்குநர் தான் அவரை மீறி நான் வெளியே சொன்னால் அது நாகரிகமாக இருக்காது.
"தெலுங்குப் படங்களில் வேலை பார்ப்பதால் அடிக்கடி ஹைதராபாத் சென்று கொண்டு இருக்கிறேன். விரைவில் படப் பிடிப்பு தொடர்பாக ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறேன். "இதுவரை இல்லாத அளவுக்கு என் கதாபாத்திரத்தை வேறொரு கோணத்தில் வடிவமைத்து இருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். "நானும் விஜய் சேதுபதியும் இணைந்து நடனமாடும் பாடல் காட்சியை அவர் படமாக்க போகிறார். "இந்தப் பாடல் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்று கூறினார் டி.ஆர்.