கால்ஷீட் பிரச்சினை காரணமாக நடிகை ஆனந்தி 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தில் இருந்து விலகி விட்டதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். புதிய இயக்குநர் இளவரசு இயக்கும் இப்படத்தை அம்மா கிரியே ஷன்ஸ், 2 எம்பி பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் அதர்வா ஜோடியாக ஆனந்தி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, பிரணீதா ஆகியோர் நடிப்பதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து படப்பிடிப்பு தொடங்கி, பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆனந்தி இப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்குப் பதிலாக அதிதி என்ற புது நாயகியை நடிக்க வைத்திருக்கிறார்களாம். கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே ஆனந்தி படத்தில் இருந்து விலகி விட்டதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அதேசமயம், முக்கியத்துவம் இல்லாத வேடம் என்பதால் அவர் விலகி விட்டார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.