உலக சாதனைக்காக பத்து மணி நேரத்தில் ஒரு முழு நீள படத்தை எடுத்து முடித்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் நாளுக்கு நாள் ஏதாவது புதுமையான விஷ யங்களோடு புதிய இயக்குநர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவோ சாதனைகளைச் சந் தித்துவிட்ட தமிழ்த் திரையுலகில் தற்போது மேலும் ஒரு புதிய சாதனை ஒன்று நடைபெற்றுள்ளது.
இயக்குநர் எம்.எஸ்.செல்வா பத்து மணி நேரத்திலேயே ஒரு முழுநீள திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி சாதனை புரிந் திருக்கிறார். அப்படத்திற்கு 'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்று தலைப்பு வைத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு தொடங்கிய இப் படத்தின் படப்பிடிப்பு, அன்று மாலை 5 மணிக்கெல்லாம் முடிவ டைந்திருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாத கடின உழைப்பினா லும் திட்டமிடலாலும் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது இயக்குநர் எம்.எஸ்.செல்வா தலைமையிலான படக்குழு.