'ஏ தில் ஹை முஷ்கில்' படம் இந்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் திரைக்கு வரும் முன்பே, ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூருடன் நெருக்கமாக நடித்த காட்சிகள் வெளியாகி சர்ச் சையைக் கிளப்பின. இருவரும் நெருக்கமாக இருக்கும் படுக்கை யறை காட்சி படத்தின் கதைக்கு அவசியம் எனக் கூறி ஐஸ்வர்யா ராயே பரிந்துரை செய்ததாகவும் செய்திகள் வெளியாயின. இதுபோன்ற நெருக்கமான காட்சிகள் அமிதாப் பச்சன் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்ப டுத்தியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் ரன்பீர் கபூரின் அண்மைய பேட்டி ஒன்றில், சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி யது எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றியது போல் அமைந்து விட்டது. "முதலில் ஐஸ்வர்யா ராயின் கன்னத்தை தொடக்கூட தயங்கி னேன். பயத்தில் என் கைகள் நடுங்கின. பின்னர் தயக்கம் இன்றி நடிக்குமாறு கூறி ஐஸ் வர்யா ராய் தான் எனக்கு ஊக்க மளித்தார். இப்படி ஒரு வாய்ப்புக் காகத் தான் காத்திருந்தேன்.
'ஏ தில் ஹை முஷ்கில்' படத்தில் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய்.