34 ஆண்டுகளுக்குப் பின் தயாராகும் இரண்டாம் பாகம்

முப்பத்து நான்கு வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் 'மணல் கயிறு.' இதன் இரண்டாம் பாகம், 'மணல் கயிறு 2' என்ற பெயரில் தயாராகிறது. இதில் விசு, எஸ்.வி.சேகர், சூரியகோஸ் ரங்கா ஆகிய மூவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்கள் மூன்று பேருமே முதல் பாகத்திலும் நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் எஸ்.வி.சேகரின் மகனாக அஸ்வின் சே க ரு ம் , சூரியகோஸ் ர ங் கா வி ன் ம க ளா க பூ ர் ணா வு ம் நடிக்கிறார்கள். இவர்களுடன் சாமிநாதன், சாம்ஸ், ஜெகன், ஜார்ஜ் ஆகியோரும் உள்ளனர். நா.முத்துக்குமார் பாடல்களை எழுத தரண் இசையமைத்துள்ளார். விசுவின் மூலக்கதைக்கு எஸ்.வி.சேகர் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளாராம்.

'யாருடா மகேஷ்' படத்தை இயக்கிய மதன்குமார் இப்படத்தை இயக்குகிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.ராமசாமி தயாரிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. "இன்று சமுதாயத்தில் பெண்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். மாறாக, அளவுக்கு அதிகமானால் என்ன நடக்கும், அளவோடு இருந்தால் வாழ்க்கை எப்படி அமையும் என்பதைச் சொல்லும் கதை இது," என்கிறார் மதன்குமார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!