ரெஜினாவின் கனவுக் கதாபாத்திரம்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' திகில் படம் மூலம் கோலிவுட்டுக்குத் திரும்பியுள்ள இளம்நாயகி ரெஜினா, இதில் ஏற்றுள்ள மரியம் கதாபாத்திரம் தன்னுடைய கனவுப் பாத்திரம் என்று கூறியுள்ளார். "எனது கனவுப் பாத்திரம் என்ன என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டே இருப்பேன். 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் மரியம் பாத்திரம் அதற்கான விடையாக அமைந்துள்ளது. செல்வராகவன் சாரின் நம்பிக்கைக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி!'' என்கிறார் ரெஜினா.

இப்படத்தில் ரெஜினா வீட்டு வேலை செய்யும் மரியம் என்னும் பெண்ணாக வருகிறார். அவரின் இறப்புக்குப் பிறகு பழிவாங்க, பேயாக வருவதாகவும் தமிழ்த் திரையுலகில் இதுவரை வெளியான பேய்ப் படங்களை ஒப்பிடும்போது, இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் படக்குழு சார்பில் கூறப்படுகிறது. 'கான்' படம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்க 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தைத் துவக்கினார் இயக்குநர் செல்வராகவன். ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்து வந்தார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!