ரசிகருக்கு கிடைத்த நூதன தண்டனை

நடிகைகளை ரசிகர்கள் ஆர்வமாகப் பார்த்து மகிழ்வதும், பின் தொடர்வதும் புதிது அல்ல. சில நடிகைகள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. சிலர் சுதந்திரமாக நடமாட முடியவில்லையே என்று நொந்துகொள்வது உண்டு. இதில், இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் புதுவிதம். இவரை அண்மையில் இளைஞர் ஒருவர் தொடர்ந்து சென்றுள்ளார். ஷ்ரத்தா எங்கு சென்றாலும் ஒரே நாளில் 17 முறை அந்த வாலிபர் இவர் பின்னால் தொடர்ந்து இருக்கிறார்.

இதைத் தடுக்க என்ன வழி என்று யோசித்தாராம் ஷ்ரத்தா. இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே அங்கேயும் அந்த வாலிபர் வந்து நின்றார். உடனே அவரை மேடைக்கு வரும்படி அழைத்த ஷ்ரத்தா, இளைஞர் மேடையேறியதும், "இவர் ஒரே நாளில் என்னை 17 தடவை பின் தொடர்ந்தார்," என்று கூறி ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன் விடவில்லை. யாரும் எதிர்பாராத நிலையில் திடீர் என்று அந்த வாலிபரைக் கட்டிப்பிடித்தார். இதனால் அவர் எதுவும் சொல்ல முடியாமல் வெடவெடத்துப் போனார். இந்த சம்பவம் இந்தி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!