செய்துகொண்டார் என்று மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் குற்றம்சாட்டி உள்ளார். மஞ்சு வாரியரும் நடிகர் திலீப்பும் காதலித்து திருமணம் செய்தனர். அவர்களுக்கு மீனாட்சி என்ற 16 வயது மகள் இருக்கிறாள். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாகத் திலீப்பும் மஞ்சுவாரியரும் பிரிந்தனர். இதையடுத்து, நடிகை காவ்யா மாதவனை அண்மையில் திருமணம் செய்துகொண்டார் திலீப். இவர்களிடையே ஏற்கெனவே நெருக்கம் இருந்தது. இதனால்தான் மஞ்சுவாரியர் திலீப்பை விட்டுப் பிரிந்தார் என்று கூறப்பட்டது.
ஆனால் திலீப் அளித்த பேட்டியில், "என் மகள் விரும்பியதால்தான் காவ்யா மாதவனைத் திருமணம் செய்துகொண்டேன்," என்று கூறி இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மஞ்சுவாரியர், "திலீப் கூறுவதில் உண்மை இல்லை. அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்வதற்காக என் மகள் மீனாட்சியைப் பொய் சொல்ல வைத்து விட்டார்கள். திலீப் எப்பொழுதுதான் நடிப்பார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை," என்று தெரிவித்துள்ளார்.