பிந்து மாதவியை மணக்கிறார் வருண்மணியன்

தொழில் அதிபரும் படத் தயாரிப்பாளருமான வருண்மணியன் நடிகை பிந்து மாதவியும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது. நடிகை திரிஷாவும் தொழில் அதிபர் வருண் மணியனும் காதலித்து வந்தனர். நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் திருமணம் நடைபெறவில்லை; இருவரும் பிரிந்துவிட்டனர். "திருமணத்திற்குப் பிறகு வருண் மணி தன்னை நடிக்கவேண்டாம் என்று கூறியதால்தான் திருமணத்தை நிறுத்தினேன்," என்று திரிஷா பிரிந்ததற்கான காரணத்தைக் கூறினார். திரிஷாவை பிரிந்த பிறகு வருண் மணியன் நடிகை பிந்து மாதவியைக் காதலித்து வருகிறார். இருவரும் கட்டிப்பிடித்து நிற்கும் புகைப்படத்தைப் பிந்து மாதவி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். கோலிவுட்டில் பெரிய ஆளாகவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பிந்து மாதவிக்கு வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை. அதனால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் பிந்து மாதவி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!