பாடல்களுக்கு முன்பே வரும் பின்னணி இசை

'நெஞ்சம் மறப்பதில்லை' பட வெளியீட்டுக்கு முன்பே அதன் பின்னணி இசையை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. 'கான்' படம் ஒத்திவைக்கப்பட் டதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்க 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை தொடங்கினார் இயக்குநர் செல்வராகவன். ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார்கள். சென்னை அருகே உள்ள கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக் கப்பட்டன. செல்வராகவன் இயக் கத்தில் உருவாகிவுள்ள முதல் பேய்ப் படம் இதுவாகும். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை யுவன் சங்கர் துவங்கினார்.

அதன் பின்னர் மளமளவென அனைத்துக் காட்சிகளுக்கும் அவர் சிறப்பாகப் பின்னணி இசை அமைத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் செல்வராக வன் மிகுந்த திருப்தியில் உள்ளாராம். "எங்களுடைய இணைப்பில் இதுவரை வந்த படங்களில் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத் தின் பின்னணி இசைதான் சிறந் தது" என்று செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், "திரையுலக வரலாற்றில் முதல்முறையாக 'நெஞ்சம் மறப்பதில்லை' படத் தின் வெளியீட்டுக்கு முன்பாக பின்னணி இசையை மட்டும் வெளியிடத் தீர்மானித்துள்ளோம்" என்று யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!