ஜெய்யும் அஞ்சலியும் காதல் ஜோடிகளாகிவிட்ட தாக பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஜோதிகா நடித்த 'மகளிர் மட்டும்' படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக பிரபலங்கள் பலர் தங்கள் வீட்டில் தோசை சுட்டு, தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுப்பதுபோல் புகைப்படம் எடுத்து, அதை டுவிட்டரில் பதிவு செய்து வந்தார்கள்.
இந்நிலையில், நடிகர் ஜெய், நடிகை அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்துள்ளார். இவர் தோசை சுடுவதுபோல் இருக்கும் புகைப்படம் ஒரு வீட்டில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. மற்றொரு படத்தில் தோசையுடன் இருவரும் காட்சி அளிக்கின்றனர். எனவே, இருவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்களோ என்ற கேள்வி திரையுலக வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.