ஜகார்த்தா: ஆளுநர் தேர்தல் வாக்குகள் விரைவு முறையில் எண்ணப்பட்டதில் திரு அகஸ் ஹரிமூர்த்தி யுதயோனோ 17.37 விழுக்காட்டு வாக்குகள் பெற்று மூன்றாவது நிலையில் வந்ததால் அவர் தமது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். கொம்பாஸ் ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட விரைவு வாக்கு எண்ணிக்கையின் முடிவு கள் நேற்று காலை வெளியிடப் பட்டன. அதன்படி, தற்போது ஜகார்த்தாவின் ஆளுநராக இருக் கும் ஜஹாஜா புர்னாமாவும் அவரது கட்சியைச் சேர்ந்த ஜாரோட் சைஃபுல் ஹிதாயத்தும் முதற்கட்டத் தேர்தலில் 42.87% வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கின்றனர்.
திரு அனீஸ் பஸ்வேடான், சண்டியாகா உனோ இணை 39.76% வாக்குகளுடன் இரண் டாம் இடத்தைப் பிடித்தது. ஜகார்த்தாவின் ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் 50% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதால் ஏப்ரல் மாதத்தில் மறு தேர்தல் நடைபெற உள்ளது. முதல் இரண்டு நிலை களில் வந்திருக்கும் இவ்விரு இணைகள் மீண்டும் போட்டியிடும்.