பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடு வோருக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று நடிகை சினேகா தெரிவித்து உள்ளார். தன்னுடன் ஒரே துறையில் பணி யாற்றும் சக கலைஞர்களான பாவனா, வரலட்சுமி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள் தமக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார். "இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன் என்ப தனை உறுதிபடுத்திக் கொள்கிறேன்.
எந்தவித பயமும் இன்றி நடந்ததை வெளிப்படையாக தெரிவித்த அவர்க ளின் தைரியத்தைப் பாராட்டுகிறேன். "பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் சமுதாயத்தில் ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான பெண்கள் அதனை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். "அதற்கு முக்கிய காரணம், எங்கே இந்த சமுதாயம் இத்தகைய செயல்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்களையே காரணம் காட்டி விடுமோ? என்ற பயம்தான்.