தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று நடிகை பாவனா அறிவித்து உள்ளார். தற்போது மலையாள நடிகர் பிருத்விராஜ் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் பாவனா. இந்த நிலையில்தான் கடத்தல், பாலியல் தொல்லைகளை அவர் சந்திக்க நேர்ந்துள்ளது. பாவனாவை ஆபாசமாக படம் எடுத்தவர்கள் அதை வெளியிடாமல் இருக்க ரூ.30 லட்சம் பணம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திரையுலகில் சிறு சிறு வேலை கள் செய்த நபர்களும் இந்தக் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள னர்.
இந்நிலையில் குற்றவாளி களுக்குத் தண்டனை கிடைக்கும் வரை திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என பாவனா அறிவித்து இருக்கிறார்.