கணவருக்காக ஸ்ரீதேவி வேண்டுகோள்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் டுவிட்டர் பக்கமும் மர்ம நபர்களால் 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போனி கபூர் இதுகுறித்து காவல்துறையில், புகார் தெரிவித்துள்ளார். மேலும், அவரது கணக்கில் இருந்து ஒரு சில தகவல்களும் பகிரப்பட்டு வருகிறது. அதில், லக்னோவில் நடக்க உள்ள ஒரு நிகழ்ச்சிக்காக பணம் வசூலிப்பதாகக் கூறி, அவரது நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் சுவரொட்டி ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு கைபேசி எண் குறிப்பிடப்பட்டு, இந்த எண்ணின் பேடிஎம் கணக்குக்கு ரூ.5,000, ரூ.10,000 தொகையை அனுப்புங்கள்," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி யாரும் பணம் அனுப்பி ஏமாந்துவிட வேண்டாம் என கணவர் சார்பாக ஸ்ரீதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!