ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில், தான் நான்கு வெவ்வேறு தோற் றங்களில் நடிப்பதாக தெரிவித்து ள்ளார் சிம்பு. சிம்பு நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் 'அன்பானவன், அசராதவன், அடங்காதவன்'. இப்படத்தில் சிம்பு மூன்று தோற் றங்களில் நடிக்கிறார் என்பது ஏற்கெனவே தெரிந்த சங்கதி தான். இந்நிலையில், நான்காவதாக மேலும் ஒரு வித்தியாசமான தோற்றத்திலும் சிம்பு நடித்து இருப்பதாக செய்திகள் வெளி யாகியுள்ளது. அது உண்மைதான் என சிம்புவும் ஒப்புக்கொண்டு உள்ளார்.
"அன்பானவன், அடங்காத வன், அசராதவன் முன்னோட் டத்தைப் பார்த்துவிட்டு, ரசிகர் களாக சிலவற்றைக் கற்பனை செய்து கொண்டு, 'இந்தக் கதை இப்படித்தான் இருக்கும்' என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். "இது ஒரு வித்தியாசமான படம். நாங்கள் புதிதாக ஒரு முயற்சி மேற்கொண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறோம். இதில் மூன்று முக்கிய கதா பாத்திரங்கள் வருவதால் படத் திற்கு இந்தத் தலைப்பு பொருத்த மாக இருக்கும் என்று நினைத்து வைத்தோம்.