விஜய் சேதுபதி என்ற பெயரைக் கேட்டாலே இளசுகள் உற்சாக மாகிவிடுகிறார்கள். கீழ்த்தட்டு பாமரர்கள் முதல் தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் வரை அவருக் கெனத் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. போதாத குறைக்கு அவரைப் பற்றி வெளிவரும் தகவல்கள் எல்லாமே நல்லவிதமாக இருப்ப தால் தொடர்ந்து அசத்துகிறார் மனிதர். போகட்டும்... விஜய் சேதுபதி குறித்த அண்மைத் தகவல் இது. திரையுலகத் தொழிலாளர்கள் நூறு பேருக்கு தலா ஒரு பவுன் தங்கம் பரிசளிக்கப் போகிறாராம். பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜன நாதன் 'உலகாயுதா' என்ற அமைப்பின் மூலம் பல நல்ல காரியங்களைச் செய்து வருகி றார். இந்த அமைப்பின் மூலம் சினிமா கலைஞர்களுக்குத் தங்கம் கொடுக்க திட்ட மிட்டிருந்தார் அவர்.
'புரியாத புதிர்' படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி.