மதுரையில் துவங்கியது ‘நாடோடிகள் 2’

சமுத்திரகனி, சசிகுமார் கூட்டணியில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் 'நாடோடிகள்'. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. சமுத்திரகனி இயக்க, சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'மெட்ராஸ் என்டர்பிரைசிஸ்' சார்பில் நந்தகோபால் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நேற்றுத் துவங்கியது. தொடர்ந்து 80 நாட்கள் மதுரையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஒரேகட்டமாக படப்பிடிப்பை நடத்தி ஆகஸ்ட் மாதம் திரைக்குக் கொண்டு வர எண்ணியுள்ளனர். 'மெட்ராஸ் என்டர்பிரைசஸ்' சார்பில் இந்தாண்டு '96', 'நாடோடிகள் 2' மற்றும் இன்னுமொரு பெரிய நடிகரின் படம் என மூன்று படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!