மோகன்லாலுடன் இணைந்து தாம் நடிக்கவிருந்த புதுப்படம் பாதியில் கைவிடப்பட்டதாக வெளியான தகவலை திரிஷா தரப்பு மறுத்துள்ளது.
மோகன்லாலை வைத்து மலையாள இயக்குநர் ஜீது ஜோசப் இயக்கிய ‘த்ரிஷ்யம்’ படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இருவரும் மீண்டும் ‘ராம்’ என்ற படத்துக்காக கூட்டணி அமைத்துள்ளனர்.
இதில் மோகன்லால் ஜோடியாக திரிஷா ஒப்பந்தமானார். பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்படக்குழு லண்டன் செல்வதாக இருந்தது. ஆனால் ஊரடங்கால் படப்பிடிப்பைத் தொடர முடியவில்லை.
இந்நிலையில் இயக்குநர் ஜீது ஜோசப் இப்படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதாகத் தகவல் பரவியது. ஆனால், அவர் இதை மறுத்துள்ளார்.
லண்டனிலும் உஸ்பெகிஸ்தானிலும் படப்பிடிப்பு நடத்தும் அளவுக்கு நிலைமை சீரானதும் ராம் படப் பணிகள் மீண்டும் துவங்கும் என ஜீது ஜோசப் தெரிவித்துள்ளார்.
தற்போது இதே விளக்கத்தை திரிஷா தரப்பும் சொல்லி வருகிறது. இதில் அவருக்கு கனமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாம்.