இறைச்சி சந்தைகள், கசாப்புக் கடைகள், இறைச்சி தொழிற்சாலைகள் உள்ளிட்டவை பல்வேறு வகையில் நோய்களைப் பெருக்கும் இடங்கள் என்கிறார் ஏமி ஜாக்சன்.
இறைச்சிக்கூடங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகளை ஏன் இன்னும் மறைக்கிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
“இறைச்சிக் கூடங்களின் சுவர்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது. அவை மோசமான நோய்கள் நிறைந்திருக்கும் அசுத்தமான இடங்கள். இறைச்சிக்கூடங்கள் மூலம் கொவிட்-19 நோய் பரவுகிறது.
“குளிராக, ஈரமாக, காற்றோட்டம் இல்லாத இடங்களாக இருப்பதால்தான் அங்குள்ளவர்களுக்கு எளிதில் நோய் பரவுகிறது. இச்சூழல் மிருகங்களுக்கு மட்டும் சிறந்ததா?” என்று ஏமி சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.