நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தேவையின்றி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக வனிதா விஜயகுமார் மீண்டும் சாடியுள்ளார்.
தமது விவகாரத்தில் போலி நீதிபதியாக இருக்கவும் லட்சுமி முயற்சி செய்வதாக தமது டுவிட்டர் பக்கத்தில் வனிதா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே நடிகை கஸ்தூரியும் தற்போது வனிதாவுக்கு எதிராகக் களமிறங்கி உள்ளார். மேலும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
“ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வது போன்று, தேவையில்லாமல் என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, போலி நீதிபதியாக இருக்கவும் ஒரு சமூக ஆர்வலர் (லட்சுமி ராமகிருஷ்ணன்) முயற்சி செய்கிறார். அவர் அப்பாவிகளின் ரத்தத்தை குடிக்கிறார்.
“நல்ல மனதுள்ள அந்த சமூக ஆர்வலர் தன் வழக்கறிஞர் மூலம் ரூ. 1.25 கோடி கேட்டு என்னை மிரட்டுவதை பாருங்கள். இது தொடர்பாக என் தரப்பு வழக்கறிஞர் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார். எல்லாவற்றையும் சட்டப்படி எதிர்கொள்வேன்,” என வனிதா விஜயகுமார் தமது பதிவில் கூறிஉள்ளார்.