கொரோனா கிருமித்தொற்றால் நாமும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்று நடிகை மிருணாளினி தெரிவித்துள்ளார்.
நம் சுற்றுப்புறத்தில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சியைப் படமாக்கவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“மற்றவர்கள் இவ்வாறு படமெடுத்தால் தடுக்கப் பாருங்கள். பாதிக்கப்பட்ட வருக்காக பிரார்த்தனை செய்வதன் மூலம் நாம் அவர் மீது அக்கறை கொண்டுள்ள நல்ல மனிதர் என்பதை உணரச் செய்யுங்கள். கிருமித்தொற்று குறித்து பயத்தை உருவாக்குவதும் அவதூறு பரப்புவதும் கூடாது. நாளை நமக்கும் கூட ஆம்புலன்ஸ் வாகனம் காத்திருக்கக்கூடும் என்றே சொல்ல வேண்டி உள்ளது. பாதிக்கப்பட்டவர் குணமடைந்துவிட்டாலும் நோய் வந்தபோது தன்னிடம் பிறர் நடந்துகொண்டது அவர் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிடும்,” என்று கூறியுள்ளார் மிருணாளினி.