ஊரடங்கு முடிந்ததும் திருமணம்

நயன்­தா­ரா­வுக்கு எப்­போது திரு­ம­ணம் என்­பது அவ­ருக்­கா­வது தெரி­யுமா என்­கிற அள­வுக்­குச் சந்­தே­கம் பர­விக்­கி­டக்­கிறது.

கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே அவர் இயக்கு­நர் விக்­னேஷ் சிவனை காத­லிப்­பது ஊர­றிந்த ரக­சி­யம். இரு­வ­ருக்­கும் இதோ திரு­ம­ணம், ஆறு மாதங்­களில் திரு­ம­ணம் என்றே மாறி மாறித் தக­வல்­கள் வரு­கின்­ற­னவே தவிர எது­வும் ஒரு முடி­வுக்கு வந்­த­பா­டில்லை.

இந்­நி­லை­யில் 2020ம் ஆண்டு பிற்­பா­தி­யில் இந்­தக் காதல் ஜோடி­யின் திரு­ம­ணம் நடை­பெறும் என்று ரசி­கர்­கள் உறு­தி­யாக நம்­பி­யி­ருந்­த­னர். ஆனால் அதி­லும் ஒரு சிக்­கல் முளைத்­தி­ருப்­ப­தாக தமி­ழக முன்­னணி ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

கொரோனா விவ­கா­ரத்­துக்கு முன்­பி­ருந்தே விக்­னேஷ், நயன்­தாரா ஜோடி தொடர் ஆன்­மீகப் பய­ணத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். முத­லில் கன்­னி­யா­கு­மரி பக­வதி அம்­மன் கோவி­லில் இரு­வ­ரும் பய­பக்­தி­யு­டன் சாமி தரி­ச­னம் செய்­த­னர். அப்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டங்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டன.

இதை­ய­டுத்து திருச்­செந்­தூர் முரு­கன் கோவி­லில் இந்­தக் காதல் ஜோடி­யைக் காண­மு­டிந்­தது. இந்­நி­லை­யில் ஆர்.ஜே. பாலாஜி இயக்­கிய ‘மூக்­குத்தி அம்­மன்’ படத்­தில் நடிக்க ஒப்­புக்கொண்­ட­துமே நயன்­தாரா சைவத்­துக்கு மாறி­விட்­ட­தா­க­வும் அவர் விர­த­மி­ருந்து பக­வதி அம்­ம­னைத் தரி­சித்­த­தா­க­வும் ஒரு பேச்சு கிளம்­பி­யது.

நயன்­தாரா, விக்­னேஷ் இருவரும் சில கோவில்­களுக்­குச் சென்று வழி­பட இருப்­ப­தாக இரு­வ­ருக்­கும் நெருக்­க­மான வட்­டத்­தில் இருப்­ப­வர்­கள் தெரி­வித்­த­னர். ஆனால், சம்­பந்­தப்­பட்ட இரு­வ­ரும் இது­பற்றி வாய்­தி­றக்­க­வில்லை.

இந்­நி­லை­யில் நயன்­தாரா ஜோதி­டத்­தில் தீவிர கவ­னம் செலுத்தி வரு­வ­தாக மற்­றொரு தக­வல் வெளி­யாகி உள்­ளது. திரை­யு­ல­கத்­தி­ன­ருக்கு நன்கு அறி­மு­க­மான அந்த ஜோதி­டர், நயன்­தாரா தென்­னிந்­திய சினி­மா­வின் உச்ச நாய­கி­யாக வளர்ச்சி காண்­பார் என்று கூறி­னா­ராம். இதை­ய­டுத்து அவர் சொல்­வது போலவே நயன்­தாரா செயல்­ப­டு­வ­தாக கோடம்­பாக்­கத்­தில் முணு­மு­ணுக்­கின்­ற­னர்.

“அந்த வகை­யில் காள­ஹஸ்தி, பக­வதி அம்­மன், திருச்­செந்­தூர் முரு­கன் கோவில் ஆகிய ஆன்­மீ­கத் தலங்­களை அடுத்து, கும்­ப­கோ­ணம் அருகே உள்ள திருநாகேஸ்­வ­ரம் கோவி­லுக்­கும் சென்று வரு­மாறு அந்த ஜோதி­டர் அறி­வு­றுத்தி உள்­ளார்.

“ராகு­ ப­க­வான் திருத்­தலத்­துக்­குச் சென்று வந்­தால் திரு­ம­ணத்தடை நீங்­கும் என்­பதே அவ­ரது அறி­வு­றுத்­த­லாக இருந்­தி­ருக்­கிறது. ஆனால், அங்கு செல்­வ­தற்கு முன்பே கொரோனா ஊர­டங்கு அம­லுக்கு வந்­து­விட்­ட­தால் ஏமாற்­றத்­தில் உள்­ளா­ராம் நயன்­தாரா.

“ஊர­டங்கு முடி­வுக்கு வந்ததும் நயன், விக்­னேஷ் ஜோடியை திரு­நா­கேஸ்­வ­ரத்­தில் காண­மு­டி­யும்,” என்று அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­கள் கூறு­கின்­ற­னர். இரு­வ­ரும் ராகு ­ப­க­வானை தரி­சித்­த­பின் திரு­ம­ணம் செய்­து­கொள்­வார்­களா, அல்­லது திரு­நா­கேஸ்­வ­ரம் ஆல­யத்­தி­லேயே திரு­ம­ணத்தை வைத்­துக்­கொள்­ளப் போகின்­றார்­களா என்­பது அவர்­கள் இரு­வ­ருக்­கும்­தான் வெளிச்­சம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!