நடிகை மீரா மிதுன்: சூர்யா ரசிகர்கள் மிரட்டுகிறார்கள்

நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தொடர்ந்து தமக்கு மிரட்டல் விடுத்து வருவதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

தினமும் பல்வேறு திறன்பேசி எண்களில் இருந்து தமக்குப் பலவிதமான மிரட்டல்கள் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கோடம்பாக்க வட்டாரங்களில் சலசலப்பு நிலவுகிறது.

சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இணைந்து நடித்துள்ளார் மீரா மிதுன். இந்நிலையில் சூர்யாவுக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை என்றும் சாதாரண காட்சியில் நடிப்பதற்குக்கூட 20 ‘டேக்’ வாங்குவார் என்றும் தமது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் மீரா கிண்டல் செய்திருந்தார்.

இதற்கு சூர்யா ரசிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே ரஜினி, விஜய், தனுஷ் குறித்தும் இவர் இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமக்கு தினந்தோறும் மிரட்டல் வருவதாக மீரா கூறியுள்ளார்.

“சூர்யா, விஜய் ரசிகர்களிடமிருந்து மிகவும் மோசமான குறுந்தகவல்கள், கைபேசி அழைப்புகள், பாலியல் மிரட்டல்கள் வருகின்றன. உங்கள் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ இதுபோல் நடந்தால் ஏற்பீர்களா? எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு சூர்யாதான் பொறுப்பு,” என்று அண்மைய சமூக வலைத்தளப் பதிவில் மீரா மிதுன் மேலும் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!