‘பெண்களைப் போற்ற வேண்டும்’

ஞான­வேல் இயக்­கத்­தில் சூர்யா நடிப்­பில் ஓடிடி தளத்­தில் வெளி­யாகி இருக்­கும் 'ஜெய் பீம்' பழங்­கு­டி­யின மக்­க­ளின் வாழ்­வி­யலை மைய­மாக வைத்து எடுக்­கப்­பட்ட படம். இப்­ப­டத்தை பார்த்த ரசி­கர்­கள் பல­ரும் சமூக வலைத்­தள பக்­கத்­தில் தங்­க­ளது கருத்தை பதிவு செய்து வரு­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில், 1993ல் நடந்த ஒரு குறிப்­பிட்ட வழக்­கும் அதைச் சார்ந்த நீதி­யும்­தான் இந்­தப் படம் என்று சூர்யா தெரி­வித்­துள்­ளார்.

'ஜெய் பீம்' தொடர்­பாக அவர் அளித்­துள்ள பேட்­டி­யில் பெண்­க­ளுக்கு ஆத­ர­வான கருத்­து­களை அள்­ளித் தெளித்­துள்­ளார். நடிக்­கிறது மட்­டும் என் வாழ்க்கை இல்ல. அத­னா­ல­தான் கடந்த 18 - 20 வரு­டங்­களா 'அக­ரம்' ஃபவுண்­டே­ஷன் மூலமா நிறைய ஏழை எளிய மக்­க­ளுக்கு உத­வ­றோம். பாதிக்­கப்­பட்ட மக்­கள் பல­ரை­யும் நேர­டி­யாக சந்­திக்­கக்­கூ­டிய வாய்ப்பு 'அக­ரம்' வழியா கிடைச்­சி­ருக்கு. என்­னு­டைய கருத்­துக்கு நிறைய பேரு­டைய ஆத­ர­வும் கிடைக்­கி­றப்ப படத்­து­ல­யும் சில கருத்­து­களை எடுத்­துச் சொன்னா நிச்­ச­யம் மக்­கள்­கிட்ட சேரும்னு ஒரு நம்­பிக்கை. அதன் வெளிப்­பா­டு­தான் 'ஜெய் பீம்'.

இன்­ன­மும் பெண்­கள் நிறைய இடங்­களில் அடக்­கு­மு­றையை சந்­திச்­சிட்­டு­தான் இருக்­காங்க. உங்க மனை­விக்கு ஆத்­மார்த்­தமா சப்­போர்ட் செய்­கிற ஒரு ஆணா அந்த சில ஆண்­க­ளுக்கு உங்­கள் அறி­வுரை என்ன?

"இந்த உல­கத்­தில் மனு­ஷனா பிறந்த அத்­தனை பேருக்­கும் கன­வு­களும் ஒரு­சில குறிக்­கோள்­களும் இருக்கு. இதை நிறை­வேற்ற யாரும் யாருக்­கும் அனு­மதி கொடுக்­க­ணும்னு அவ­சி­யம் கிடை­யாது.

நடிப்பு, ஷூட்­டிங் இதெல்­லாம் ஜாலி­யான ஒரு விஷ­யம். ஆனா, ஒரு­நாள் வீட்ல குழந்­தை­களைப் பார்த்­துக்­கொள்­ளும்­போதுதான் அதில் எவ்­வ­ளவு பொறுப்­பு­கள், சவால்­கள் இருக்­குன்னு தெரி­யும். ஒரு நாளைக்கே அப்­ப­டீன்னா தின­மும் குழந்­தை­க­ளைப் பார்த்­து­கிட்டே, குடும்­பத்­தை­யும் கட்­டுக்­கோப்பா நடத்­திட்டு, வேலை­யும் செய்­கிற என் மனைவி ஜோதிகா மட்­டு­மல்ல, அத்­தனை பெண்­ க­ளுமே கிரேட்­தான். அவர்களைப் போற்ற வேண்டும். சப்­போர்ட் செய்­ய­லைன்னாகூட பர­வா­யில்லை பெண்களை அடக்க நினைக்க வேண்­டாம். குறிப்பா 'அனு­மதி' என்­னும் வார்த்­தையே வேண்­டாம்.

நீதி­பதி சந்­து­ரு­வி­டம் இருந்து நீங்க கத்­துக்­கிட்ட நல்ல விஷ­யங்­கள் என்னென்ன?

"ஒரு தனி­ந­பர் 25 பெண்­க­ளுக்கு வாழ்­வா­தா­ரம் கொடுக்­க­மு­டி­யுமா? ஒரு சமூ­கத்­தி­னு­டைய வாழ்க்கை நிலையை மாற்றமுடி­யுமா? இப்­படி பல கேள்­வி­கள் சந்­துரு சாரை பார்த்து எனக்கு தோணுச்சு. நமக்­குக் கிடைச்ச அத்­தனை விஷ­யங்­க­ளுக்­கும் பின்­னால யாரோ ஒரு­வ­ரு­டைய அல்­லது எத்­த­னையோ பேரு­டைய போராட்­டம் இருக்கு. இது நமக்கே தெரி­யாது.

"அப்­ப­டித்­தான் இன்­னைக்கு நாம அனு­ப­விக்­கிற பல விஷ­யங்­க­ளுக்­குப் பின்­னாடி சந்­துரு சாரும் ஒரு கார­ணமா இருக்­கார். ஆர்­டிஐ ஆக்ட் ஆரம்­பிச்சு, சத்­து­ண­வுக்­கூ­டத்­தில் பெண்­க­ளுக்கு வேலை துவங்கி... பல மாற்­றங்­க­ளுக்கு கார­ணம் சந்­துரு சார்­தான்.

"அவ­ரு­டைய வாழ்க்கை வர­லாற்றை படமா எடுக்­க­ற­தும் அவர் கேரக்­ட­ரில் கோட்டு போட்டு நடிக்­க­ற­தும் எனக்கு கிடைச்ச மிகப்­பெ­ரிய ஆசீர்­வா­தம். அவர் இந்த கதைக்கு ஓகே சொன்­னதே எங்­க­ளுக்கு கிடைச்ச மிகப்­பெ­ரிய அங்­கீ­கா­ரம். அவர்­கிட்ட இருந்து தினம் தினம் கத்­துக்க அவ்­வ­ளவு விஷ­யங்­கள் இருக்கு," என்றார் சூர்யா.

இதற்கிடையே, 'ஜெய் பீம்' படத்தின் தலைப்பை கொடுத்த இயக்குநர் பா.ரஞ்சித், படத்தைப் புகழ்ந்ததுடன் இந்தக் கதை போல பலகதைகள் இனி வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!