‘நயன் இல்லேன்னா லட்சுமி’

மனச்­சி­தை­வால் பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் கதையை அலசும் பட­மாக உரு­வாகி உள்­ளது 'ஏஜிபி'. அறி­முக இயக்­கு­நர் ரமேஷ் சுப்­ர­ம­ணி­யன் இயக்கி உள்­ளார்.

லட்­சுமி மேனன் நாய­கி­யாக நடிக்க, ஓர் உண்­மைச் சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யாக வைத்து திரைக்­கதை அமைத்­துள்­ளார் ரமேஷ்.

இயக்­கு­நர் சக்தி செளந்­த­ர­ரா­ஜ­னி­டம் உதவி இயக்கு­நரா­கப் பணி­யாற்­றிய அனு­ப­வம் கைகொ­டுப்­ப­தால், தன் குரு­நா­த­ரைப் போலவே வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளத்­து­டன் தாமும் கள­மி­றங்கி உள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"மனச்­சி­தைவு என்ற நோயின் பாதிப்பு உல­கெங்­கும் இருக்­கிறது. சரா­ச­ரி­யாக 125 பேரில் ஒரு­வ­ருக்கு இந்த நோயின் பாதிப்பு இருக்­கிறது என்­கி­றார்­கள் மருத்­துவ நிபு­ணர்­கள்.

"இந்த நோயின் தன்­மை­யைப் பற்றி நிறைய தக­வல்­க­ளைக் கூற முடி­யும். முக்­கி­ய­மா­னது என்­றால், இப்­ப­டி­யொ­ரு பிரச்­சினை இருப்­பது சம்­பந்­தப்­பட்­ட­வ­ருக்கே தெரி­யாது. இத­னால் பெரும் மன அழுத்­தத்­துக்கு ஆளா­கி­றார்­கள்.

"தமி­ழில் இதற்கு முன்பு 'ஆள­வந்­தான்' படத்­தில் கமல், '3' படத்­தில் தனுஷ் ஆகி­யோர் கிட்­டத்­தட்ட இப்­ப­டிப்­பட்ட கதா­பாத்­தி­ரத்­தில்­தான் நடித்­துள்­ள­னர். இந்த நோயைக் குணப்­ப­டுத்த சென்­னை­யில் ஒரு சிகிச்சை மையம் இயங்கி வரு­கிறது," என்­கி­றார் ரமேஷ்.

தனிமை, உற­வு­க­ளைப் பிரி­தல், காதல் தோல்வி போன்ற பிரச்­சி­னை­க­ளால் 'டோபா­மைன்', 'குளு­டோ­மேட்' போன்ற சுரப்­பி­கள் அதி­கம் சுரக்­கும் என்­றும் இதன் கார­ண­மாக மூளை சீராக இயங்­காது என்­றும் சுட்­டிக்­காட்­டு­ப­வர், படத்தை திரை­யில் காணும்­போது தமக்கு இத்­த­கைய பிரச்­சினை இருப்­ப­தாக சில­ருக்கு தோன்­றும் வாய்ப்­புண்டு என்­கி­றார்.

குறைந்­த­பட்­சம் இந்­தப் பாதிப்பு குறித்து நான்கு பேரி­ட­மா­வது விவ­ரம் தெரி­வித்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தவேண்­டும் என்ற எண்­ணம் மன­தில் வலுக்­கும் என்­றும் சொல்­கி­றார்.

இந்­தப் படத்­துக்­கான கதையை எழுதி முடித்­த­தும் நாய­கி­யாக நடிக்க நயன்­தாரா அல்­லது ஆண்ட்­ரியா ஆகிய இரு­வ­ரும்­தான் பொருத்­த­மாக இருப்­பார்­கள் எனக் கரு­தி­னா­ராம்.

ஆனால் இரு­வ­ருமே பல படங்­களில் நடித்து வரு­வ­தால் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு கால்­ஷீட் இல்லை என்று கூறி­யுள்­ள­னர். அதன்பிறகே லட்சுமி மேனனை நடிக்­கக் கேட்டு அணு­கி­ய­தாக உண்­மையை ஒப்­புக்கொள்­கி­றார் இயக்­கு­நர் ரமேஷ்.

லட்­சுமி மேனனோ கதை­யைக் கேட்ட அடுத்த நிமி­டமே, "எப்­போது படப்­பி­டிப்பு?" என்று கேட்­டா­ராம். இந்­தப் படத்­துக்­குப் பிறகு லட்­சுமி, கோடம்­பாக்­கத்­தில் மீண்­டும் ஒரு வெற்றி வலம் வரு­வார் என்­பது ரமே­ஷின் நம்­பிக்கை.

"கடந்த சில மாதங்­களில் மட்­டும் பத்­துக்­கும் மேற்­பட்ட இயக்­கு­நர்­க­ளி­டம் கதை கேட்­டுள்­ளார் லட்­சுமி. ஆனால் எந்­தக் கதை­யும் அவ­ரது மன­தைக் கவ­ர­வில்லை. இந்­நி­லை­யில், நான் சொன்ன கதை வித்­தி­யா­ச­மாக இருப்­ப­தா­கப் பாராட்­டி­னார்.

"கதைப்­படி அவ­ரது பெயர் பூஜா. மும்­பை­யில் இருந்து சென்­னைக்கு வரும் பூஜா­வுக்கு மனச்­சி­தைவு பாதிப்பு இருப்­பது அவ­ருக்கே தெரி­யாது. சென்­னை­யில் நடக்­கும் ஒரு சம்­ப­வம் அவரை வெகு­வா­கப் பாதிக்­கிறது.

"அதை எப்­படி எதிர்­கொள்­கி­றார், மனச்­சி­தை­வும் ஒரு­பக்­கம் நெருக்­கடி கொடுக்க, கடும் போராட்­டத்தை எதிர்­கொள்­கி­றார். அவர் எப்­படி பாதிப்­பில் இருந்து மீள்­கி­றார் என்­பது­தான் கதை.

"பியூட்­டி­ஃபுல் மைண்ட்' என்ற ஆங்­கி­லப் படத்­தில் ரசல் குரோவ் நடித்­தி­ருப்­பார். கணித நிபு­ணத்­து­வத்­துக்­காக நோபல் பரிசு வாங்­கி­ய­வர் பற்­றிய கதையை விவ­ரிக்­கும் படம் அது.

"அந்­தச் சாதனை மனி­தர் மனச்­சி­தை­வால் பாதிக்­கப்­பட்­ட­வர். தனக்­குள்ள பிரச்­சி­னையை வைத்­துக்­கொண்டு அவர் எப்­படி வாழ்க்­கை­யில் சாதித்­துக் காட்­டு­கி­றார் என்­ப­து­தான் சிறப்­பம்­சம். அது­போன்­ற­தொரு கதா­பாத்­தி­ரத்­தில்­தான் லட்­சுமி மேனன் நடிக்­கி­றார்," என்­கி­றார் ரமேஷ்.

'நீ நான் நிலா', 'பாக்­க­ணும் போல' உள்­ளிட்ட படங்­களில் நாய­க­னாக நடித்­துள்ள பர­தன் இந்தப் படத்­தில் வித்­தி­யா­ச­மான வேடத்தை ஏற்­றுள்­ளார்.

மனச்­சி­தைவு பாதிப்­புள்ள சிலர் பெரும்­பா­லும் அமை­தி­யாக இருப்­பார்­கள். பின்­னர் திடீ­ரென்று ஆவே­ச­ம­டை­வார்­கள். இத்­தகைய மோச­மான பாதிப்பு கொண்­ட­வராக பர­தன் நடிப்­பில் அசத்தி உள்­ளா­ராம்.

அதென்ன 'ஏஜிபி'. வித்­தி­யா­ச­மான தலைப்­பாக இருக்­கி­றதே என்று கேட்­கா­த­வர்­களே இல்­லை­யாம்.

"படத்­தில் மூன்று முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளின் பெயர்­களில் உள்ள முதல் எழுத்தை கோர்த்­தால் தலைப்பு வரும். கதை கொரோனா கால­கட்­டத்­தில் நடப்­ப­து­போல் இருக்­கும்.

"வழக்­க­மான நாட்­களில் நாம் எங்­கும் போக­லாம். ஆனால், கொரோனா சம­யத்­தில் வீட்­டில் இருந்­த­வர்­களே தனித்தனி அறை­யில் இருந்­தோம். அந்த மாதிரி சூழ்­நி­லை­யில் மனச்­சி­தைவு உள்­ள­வர்­கள் எப்­படி பாதிக்­கப்­ப­டு­வர் என்­ப­தைச் சொல்லி இருக்­கி­றோம்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். யாருடனாவது பேசுவது, யோகா செய்வது, படிப்பது, உடற்பயிற்சி செய்வது என்று எதையாவது செய்வது நல்லது.

"சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், மூளை அமைதி அடைய வேண்டும்," என்கிறார் ரமேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!