நடிகை சமந்தா பொது இடத்திற்கு அணிந்து வந்த டீ-சட்டை ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
அண்மையில் மும்பை சிகை அலங்காரக் கடை ஒன்றில் இருந்து இவர் வெளியே வந்தபோது ரசிகர் ஒருவர் எடுத்த புகைப்படத்தில் இவரது டீ-சட்டையில் தகாத ஆங்கில வாசகம் இடம்பெற்றிருந்ததை இணையவாசிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இருப்பினும், சமந்தா தம்மைப் பற்றிய பல விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருந்ததுபோலவே இந்த விமர்சனத்தையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
தனியொருவர்மீது வைத்துள்ள கோபத்தைக் காட்டுவதற்காக பொது இடங்களில் இப்படி ஆபாசமான வாசகங்கள் அடங்கிய ஆடையை அணியக்கூடாது என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.