தமிழ் திரையுலகில் லதா மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கர் தமிழில் 1950களில் சில இந்தி படங்கள் மொழிமாற்றம் செய்தபோது அவற்றில் தமிழில் பாடினார்.

அதன் பின்னர் 1980களில்தான் இளையராஜாவின் இசையில் லதா மங்கேஷ்கர் மீண்டும் பாடினார்.

1987ம் ஆண்டு பிரபு நடித்த ‘ஆனந்த்’ என்ற படத்திற்காக தமிழுக்கு அழைத்து வந்தார் இளையராஜா.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடல்தான் அவர் நேரடியாகப் பாடிய முதல் தமிழ் பட பாடல் என்று கூறப்படுகிறது. .

1988ல் இளையராஜா இசையில் கமல் ஹாசன் நடித்த ‘சத்யா’ படத்தில் இடம்பெற்ற ‘வளையோசை’ என்ற காலத்தை வென்ற பாடலை, காலஞ்சென்ற எஸ்பி பாலசுப்பிரமணியத்துடன் சேர்ந்து பாடினார்.

அதே ஆண்டு ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் இடம்பெற்றிருந்த ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலையும் அவர் பாடியுள்ளார்.

ஏஆர் ரகுமானின் இசையிலும் லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.

ரகுமான் இசையமைத்த புக்கார், ஸுபைடா, லகான், ரங் தே பசந்தி உள்ளிட்ட படங்களில் அவர் பாடல்களைப் பாடியுள்ளார்.

திருவாட்டியின் லதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் ஏஆர் ரகுமான்.

லதா மங்கேஷ்கரும் அவரது சகோதர சகோதரிகளும் தமிழ்த் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனைத் தங்கள் மூத்த சகோதரராக எண்ணி உறவாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1960களில் தமது பல பாடல் ஒலிப்பதிவுகள் சென்னையில் இருந்ததாகவும் அப்போதெல்லாம் சிவாஜி கணேசனின் இல்லத்தில்தான் தங்கியதாகவும் அவர் பேட்டிகளில் நினைவுகூர்ந்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!