‘மதயானைக் கூட்டம்’ என்ற வெற்றிப் படத்தைத் தந்த விக்ரம் சுகுமாறன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் ‘இராவணக் கோட்டம்’
சாந்தனு நாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் வெளியானதும் சாந்தனு தமிழ்த் திரையுலகில் புதிய உயரங்களைத் தொடுவார் என்கிறார் இயக்குநர்.
‘இராவணக் கோட்டம்’ என்ற தலைப்பு வித்தியாசமாக உள்ளதே?
“உண்மையில் இந்தப் படத்துக்கு ‘தமிழகம்’ என்றுதான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். ஒரு தமிழ் அரசனுடைய ஊரைப் பற்றி பேசக் கூடிய படம்.
“இராவணன் ஒரு தமிழ் அரசன்தான். சோழர், பாண்டியர் என்றுகூட தலைப்பு வைத்திருக்கலாம்.
“ஏற்கெனவே கிராமத்துக் கதையைத்தான் இயக்கி இருந்தேன். அடுத்து, நகரத்தை மையப்படுத்தி கதைக்களத்தை அமைக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனாலும் மீண்டும் கிராமத்துக் கதைதான் அமைந்தது.
“காலம் காலமாக இருக்கும் கருவேல மர அரசியல், அதற்குப் பின்னணியில் உள்ள பலம்வாய்ந்த நிறுவனங்கள், சாதிப் பிரச்சினைகள் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாகி உள்ளது இந்தப் படம்.
“கருவேல மரம் நம் நாட்டுக்குள் வந்ததற்கு வேண்டுமானால் ஆங்கிலேயர்கள் காரணமாக இருக்கலாம். ஆனால், அதை அழிக்க முடியாமல் இருக்க என்ன காரணம், யார் செய்யும் சதி இது என்று நிறைய கேள்விகள் உள்ளன.
“அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைத்தால் கருவேல மரங்களை அடியோடு அழிக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் அதைக் கொண்டு சாதிப் பிரச்சினையைத் தூண்டிவிட்டு அரசியல் செய்கிறார்கள். அதைப்பற்றித்தான் இந்தப் படம் விவாதிக்கிறது.
“சாந்தனுவுக்கு இந்தப் படம் அவரது திரைப்பயணத்தில் மிக முக்கியமானதாக இருக்கும். அவரும் தன் பொறுப்பை உணர்ந்து அருமையாக நடித்துள்ளார்.
“ஆனந்தி திரையில் அழகாகத் தெரியக்கூடிய நாயகி. இந்தப் படத்திலும் அவர் தனது இயல்பான நடிப்பால் கவர்ந்துள்ளார். இது சமூக நலம் சார்ந்த கருத்தை முன்னிறுத்தும் படம்,” என்கிறார் விக்ரம் சுகுமாறன்.
, :
தமிழகத்