‘பிகில்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அம்ரிதா, அடுத்து ‘ஹனுமன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் பாகுபாடு பார்ப்பதில்லை என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமை உள்ள நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
“தமிழகத்தின் கோவை மாவட்டம் என் மனதுக்கு நெருக்கமான இடம். கல்லூரியில் படிக்கும்போது பலமுறை கோவை வந்துள்ளேன். ஒவ்வொரு முறை வரும்போதும் புது அனுபவமாக உள்ளது. எனக்கு கோவை உணவு மிகவும் பிடிக்கும்,” என்கிறார் அம்ரிதா.