நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள், படைப்பாளர் சந்திப்பு, சுற்றுலாக்கள், மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றுடன் வித்தியாசமான 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுடன் மார்ச் 8 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது 'உள்ளூர் படைப்பு இலக்கிய நூல்களை வாங்குங்கள்' (#பைசிங்லிட்) இயக்கம்.
இரு வாரயிறுதிகளில் நடைபெறும் இந்த விழாவில் உள்ளூர் தமிழ் நூல்களைப் பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளும் உண்டு.
சிங்கப்பூரின் கலாசார பதக்கம் பெற்ற மூத்த எழுத்தாளர் மா. இளங்கண்ணனின் 'வைகறைப் பூக்கள்' நாவலை மையமாக கொண்டு 'பார்வை 2019' எனும் மாறுபட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம்.
இந்த நாவல் குறித்த கருத்தரங்கு, கலந்துரையாடலுடன் நாவலின் சில காட்சிகளை நாடகமாகவும் படைக்கின்றனர் இளை யர்கள். இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி மார்ச் 8, 10 ஆகிய தேதிகளில் தேசிய நூலக வாரியத்தில் நடக்கவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். மேல் விவரங்களுக்கு https://buysinglit.sg/programme/parvaai-2019/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.
மற்றொரு நிகழ்ச்சியாக பி.கிருஷ்ணன், இராம கண்ணபிரான் போன்ற மூத்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாடக வடிவில் படைக்கிறது 'சிங்கப்பூர் இந்திய திரைப்பட, நாடக ஆர்வலர்கள்' (சிட்ஃபி) அமைப்பு. மார்ச் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேசிய நூலக வாரியத்தில் நிகழ்ச்சி நடைபெறும். இலவச நுழைவுக்கு https://tinyurl.com/vaangernadikalaam என்ற இணையத்தளத்தை நாடலாம்.
'அவாண்ட்' நாடகக்குழுவின் 'நம்மவர்' நிகழ்ச்சியில் படைப்பாளரும் செய்தியாளருமான லதாவின் சிறுகதைகளின் மேடை வாசிப்புடன் கதைகள் குறித்த கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும். மலாய் மரபுடைமை நிலையத்தில் மார்ச் 9ஆம் தேதியன்று மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை முதல் நிகழ்ச்சியும் இரவு 7 முதல் 8.30 மணி வரை இரண்டாம் நிகழ்ச்சியும் நடைபெறும். $15 மதிப்புள்ள நுழைவுச் சீட்டுகளுக்கு https://nammavar.eventbrite.sg/ என்ற இணையத்தளத்தை அல்லது admin@avanttheatre.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
'பிளேக் ஸ்பைஸ் மீடியா' நிறுவனம், உள்ளூர் தமிழ் சிறுகதைகளை வைத்து திரைக் கதைகள் எழுதும் முறைகளைக் கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி ஒன்றும் பைசிங்லிட் விழாவில் இடம்பெறும். 'திரைக்கதை எழுதுதல்' என்ற தலைப்பில் நடத்தப் படும் இந்த ஒரு நாள் பயிலரங்கு, உள்ளூர் தமிழ் எழுத்து வடிவங் களைப் படிக்க ஒரு வாய்ப்பாக அமையும். பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப் படும் இந்த நிகழ்ச்சி மார்ச் 16ஆம் தேதியன்று தெம்பனிஸ் வட்டார நூலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். https://tinyurl.com/writingscreenplayintamil என்ற இணையத்தளத்திற்குச் சென்று இப்பயிலரங்கிற்கு விண்ணப்பிக்கலாம்.
23 உறுப்பினர்கள் அடங்கிய பணிக்குழு வழிநடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு தேசிய கலைகள் மன்றம் ஆதரவளித்து வருகிறது.
அண்மைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் இவ்வாண்டு கூடுதலாக இன்னொரு வாரயிறுதி யிலும் இவ்விழா நடைபெறும். இவ்விழா உள்ளூர் பதிப்பாளர்கள், சில்லறை வர்த்தகர்கள், லாப நோக்கமற்ற நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோரின் நிகழ்ச்சி களுக்கு ஒரு தளமாக அமையும்.
'#பைசிங்லிட்' பற்றிய மேல் விவரங்களுக்கு https://buysing lit.sg/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.