இஸ்லாமியர்கள் மாதம் முழுதும் நோன்பு நோற்கும் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு உதவும் நோக்கில் 35,000 கிலோ அரிசியை சிங்கப்பூர் பௌத்த மடாலயம் (புத்திஸ்ட் லாட்ஜ்) நன்கொடையாக வழங்கியுள்ளது.
புக்கிட் திமா பகுதி அருகே லூவிஸ் சாலையில் அமைந்துள்ள ப'அல்வி பள்ளிவாசலில் கடந்த திங்கட்கிழமை அந்த அரிசி நன் கொடை வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
சிங்கப்பூர் பௌத்த மடாலயத் தின் தலைவர் டான் லீ ஹுவாக், ப'அல்வி பள்ளிவாசலின் இமாம் சையது ஹசான் அல்-அத்தாஸிடம் நன்கொடையை வழங்கினார்.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் பௌத்த மடா லயம் ரமலான் மாதத்தை முன் னிட்டு அரிசியை பெருமளவில் நன்கொடையாக வழங்கிவருகிறது.
சிங்கப்பூர் பௌத்த மடாலயத் தின் மறைந்த முன்னாள் தலைவ ரும் சமய நல்லிணக்கத் தூதுவரும் கொடை வள்ளலுமான திரு லீ போக் குவான் முதல் முறையாக ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அரிசி நன்கொடை திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அந்த ஆண்டு 32,000 கிலோ அரிசியை ப'அல்வி பள்ளிவாசலுக்கு கொடையாக அளித்திருந்தார்.
அன்று முதல் ஏறத்தாழ 180 டன்னுக்கு மேலான அரிசியை சிங்கப்பூர் பௌத்த மடாலயம் கொடையாக வழங்கியுள்ளது.
அவரது நன்கொடைத் திட்டத் தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சிங்கப்பூர் பௌத்த மடாலயம் ஆண்டுதோறும் இந்தச் சேவையில் இறங்கியுள்ளது.
வசதி குறைந்தவர்களும் மகிழ்ச்சியுடன் விழாக்காலத்தைக் கழிக்கவேண்டும் என்ற மறைந்த திரு லீயின் கொள்கையை அந்த அமைப்பு நிறைவேற்றி வருகிறது.
வழங்கப்பட்ட 35,000 கிலோ அரிசியும் தீவெங்கும் உள்ள பள்ளிவாசல்களுக்குத் தேவைக் கேற்ப வழங்கப்படும் என்று இந்த அரிசி நன்கொடை விநியோக திட்டத்தில் தொண்டூழியராகச் சேவையாற்றும் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைமை அதிகாரி திரு ஹாஜா மைதீன் குறிப்பிட்டார்.
பள்ளிவாசல்கள் ரமலான் மாதத்தில் தினந்தோறும் சமைக்கப் படும் நோன்புக் கஞ்சிக்காக நன் கொடையாக வழங்கப்படும் அரிசி யில் ஒரு பகுதி பயன்படுத்தப்படும்.
பள்ளிவாசல்களில் இலவசமாக விநியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சிக்குத் தேவைப்படும் அரிசி யின் ஒரு பங்கை இது பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.
நன்கொடை அரிசியில் மற் றொரு பகுதி பள்ளிவாசல்களில் உதவி கேட்டு வரும் வசதி குறைந் தோருக்கு வழங்கப்படும். ரமலான் மாதத்தில் தினமும் 1000க்கும் மேலான வசதி குறைந்தவர்களை இந்த அரிசி சென்றடையும் என்று நம்பப்படுகிறது.
இவ்வாண்டு ரமலான் மாதம் மே மாதம் ஆறாம் தேதி தொடங் குகிறது.
அதனையொட்டி மேலும் பல அமைப்புகள் தங்கள் உதவிக் கரத்தை நீட்டிவருகின்றன.
அமிதாபா புத்தர் சங்கமும் 20,000 கிலோ அரிசியை நன் கொடையாக வழங்கவிருப்பதாக உறுதியளித்துள்ளது.
நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை ப'அல்வி பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
நன்கொடை அளிக்கவிரும்பும் இதர அமைப்புகளும் நன்கொடை பெற விரும்புவோம் வசதி குறைந்த பொதுமக்களும் இத்திட்டத்தின் தொண்டூழியர் திரு ஹாஜா மைதீனை 97862574 எனும் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.