உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுவையூட்டிகளைக் கொண்டு சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்.
ஆக நீளமான சுவையூட்டி வரிசையை ஏற்பாடு செய்து நேற்று பிற்பகல் இந்தச் சாதனையை இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம் படைத்துள்ளது. ஏறத்தாழ 410 போத்தல்களில் சுவையூட்டிகள் அடைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் அமைந்துள்ள நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தில் சாதனை முயற்சியாக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் தேதி முதல் இன்று வரை கார்களற்ற வார இறுதியாக தெலுக் ஆயர் ஸ்திரீட் உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு நிலையத்திற்கு மேலும் பார்வையாளர்களை ஈர்த்து, அவர்கள் சுவையூட்டி வரலாற்றை
யும் மகத்துவத்தையும் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சமுதாய, குடும்ப மேம்பாடு; கல்வி அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்ற செயலாளர் இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைசல் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“சிங்கப்பூர், மலேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகள், இதர ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், மேற்கத்திய நாடுகள் என உலகின் பல பகுதிகளிலிருந்து சுவையூட்டிகள் பெறப்பட்டு இந்தச் சாதனையை ஏற்பாட்டாளர்கள் படைத்துள்ளனர்,” என்றார் நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தின் செயலாளர் திரு நசீர் கனி.
“ஆய்வுகள் அடிப்படையில் சுவையூட்டிகளைப் பற்றி ஆராய்ந்து அவற்றை இங்கு தருவித்து இந்தக் கண்காட்சியை உருவாக்க சுமார் இரண்டு மாதங்கள் எடுத்தது,” என்றார் இதன் பின்னணியில் இயங்கிய திரு முகமது நசீம் அப்துல் ரஹீம்.
“இந்தக் கண்காட்சி மூலம் சுவையூட்டிகளின் பெருமைமிக்க வரலாற்றை மக்களுக்கு எடுத்துச்சொல்ல விரும்புகிறோம். வரலாற்
றில் எவ்வளவு முக்கிய பங்கை சுவையூட்டிகள் வகித்துள்ளன, பல போர்களுக்கும் நில ஆக்கிரமிப்புகளுக்கும் அவை காரணமாகியுள்
ளன போன்ற தகவல்களை மக்கள் அறிய வாய்ப்பளிக்கிறது,” என்றார் அவர்.
“இந்தியாவின் கோரமண்டல் கரைப்பகுதியிலிருந்தும் மலபார் கரைப்பகுதியிலிருந்தும் வந்துள்ள இந்திய முஸ்லிம் வணிகர்களின் வரலாறும் சுவையூட்டிகள் வரலாறும் பிரிக்கப்படமுடியாத பந்தம் கொண்டவை,” என்றும் திரு நசீம் கூறினார்.