ப. பாலசுப்பிரமணியம்
சமூகத்தின் குரலாக விளங்கும் தமிழ் முரசு நாளிதழ் ஆண்டாண்டு காலமாக இந்திய சமூகத்தினரைப் பாதிக்கும் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வருகிறது.
நவீன யுகத்தில் அனைவரின் கவனமும் மின்னிலக்கக் காணொளிகளில் பதிந்திருக்க, அந்த மோகத்திலேயே ஒரு புதிய இணையக் காணொளித் தொடரை தமிழ் முரசு நாளிதழ் வரும் பொங்கல் அன்று வெளியிடவிருக்கிறது.
இவை, சமூக அக்கறைகள் பற்றிய சிந்தனையைத் தூண்டும் விதமாக இருக்கும். ஆனால் சொல்லப்பட்டிருக்கும் விதம் மாறுபட்டிருக்கும்.
"தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்தின் மூலம் சமூகச் செய்திகளை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப படைக்கும் முயற்சிகளை இத்தொடரில் கையாண்டுள்ளோம்," என்று 'PerfectImage00 Entertain ment' தயாரிப்பு நிறுவன இயக்குநரான திரு இ.சுந்தர் தெரிவித் தார்.
காணொளியில் இடம்பெறும் வெளிப்புற காட்சிகள் வண்ணமயமாகவும் ஆர்வமூட்டும் வகையில் இருப்பதுடன் இளையர்களை சென்றடைவதற்காக நவீன சாயலில் தெருக்கூத்து, ஐந்து காணொளி களில் இடம்பெற்றிருக்கும் என்று அவர் விளக்கினார்.
மின்னிலக்கத் தாக்கம், மாறி வரும் வாசிப்புப் பழக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தமிழ் முரசு நாளிதழ், சுவையான தகவல்களை தனது இணையத்தளம், 'ஃபேஸ்புக்', 'இன்ஸ்டாகிராம்' வழி தொடர்ந்து பகிர்ந்து வருகிறது என்றார் தமிழ் முரசின் செய்தி, மின்னிலக்கப் பிரிவின் ஆசிரியர் திரு தமிழவேல்.
செய்தித்தாள் வழியாக மட்டும் வாசகர்களுக்குச் செய்தி வழங்கி வந்த முரசு, இன்று இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் கோலோச்சி வருகிறது என்றும் பல தரப்பட்ட செய்திகளையும் காணொளிகளையும் முரசு செய்திக் குழுவினர் தயாரித்து வழங்கி வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.
அந்த வரிசையில் தமிழர் பாரம் பரிய கலைகளில் ஒன்றான தெருக்கூத்தைப் பறைசாற்றுகிறது இத்தொடர்.
தமிழ் முரசில் அச்சு வடிவில் தெரிவிக்கும் செய்திகளைத் தெருக்கூத்து வழியாகவும் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்பதே தொடரின் நோக்கம் என்று திரு தமிழவேல் மேலும் கூறினார்.
தெருக்கூத்தைப் பற்றிய காணொளியோடு, தமிழ் முரசின் வரலாறு, அடுத்தகட்ட அத்தியாயம், தேசிய ஒருங்கிணைப்பு, சிங்கப்பூரில் தமிழ் மொழி பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என ஐந்து தலைப்புகளையொட்டி இத்தொடர் இருக்கும்.
தெருக்கூத்து தொடரை தனித்துவ 'சினிமா' சாயல் கொண்ட பாணியில் மணிமாறன் கிரியே ஷன்ஸ் நடனக் குழுவினர் தயாரித்து உள்ளனர்.
தெருக்கூத்து படைப்பில் இடம்பெறும் மூல கதாபாத்திரம் நாடக அம்சங்களில் அதிக கவனம் செலுத்த, பின்னணியில் நடன மணிகள் பாடலுக்கு ஏற்றவாறு அபிநயம் பிடிப்பர் என்று குழுவில் இடம்பெற்றுள்ள துணை நடன ஒருங்கிணைப்பாளர் 35 வயது முகம்மது ஷஜீர் கான் சொன்னார்.
ஒயிலாட்டம், பறையாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்களும் இவர்களது படைப்புகளில் சேர்க்கப் பட்டு உள்ளது.
'தேசிய ஒருங்கிணைப்பு' தெருக்கூத்து படைப்பில் மலாய், சீன பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் பொருட்கள் நடனத்திற்கு பயன் படுத்தப்பட்டிருப்பதாக குழுவின் நடன ஒருங்கிணைப்பாளர் ரா. சுரேந்திரன், 35, கூறினார்.
தேசிய ஒருங்கிணைப்பு படைப்பில் இடம்பெறும் மூல கதாபாத்திரமான 27 வயது மா.பார்த்திபன், முகத்தில் நீலச் சாயத்தைப் பூசி, ஜொலிக்கும் பாரம்பரிய ஆடை ஆபரணங்களை அணிந்து ராஜா போன்று கம்பீரமாக தோற்றமளிக்க விருக்கிறார்.
"வழக்கமான பாரம்பரிய நடனத்துடன் ஒப்பிடுகையில் தெருக்கூத்தில் முக பாவனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து உரக்கப் பேசி நடித்து, ஆடிப்பாடும் சுதந்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக் கிறது.
"காணொளிகளைப் பார்வையிடுவோர் இதனை அனுபவபூர்வமாக உணரலாம்," என்றார் பார்த்திபன்.
அடுத்தாண்டு பொங்கல் பண்டி கையின்போது, தமிழர் பாரம்பரியத்தை கொண்டாடும் விதமாக தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் தமிழ் முரசின் இணையத் தளம், சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொளித் தொடர் வெளியிடப் படுகிறது.
தமிழ் முரசின் சிறப்பு தெருக் கூத்து காணொளி தொடர் பாடல்களில் பிரபல திரைப்படக் கலை இயக்கு நரான (Art Director) 41 வயது திரு த.ராமலிங்கத்தின் தனி முத்திரை பதிந்துள்ளது.
இவர், 'காலா', 'கபாலி' போன்ற தமிழ் திரைப்படங் களின் கலை இயக்குநர்.
விழுப்புரம், வானூர் வட்டம், பேராவூர் கிராமத்தில் பிறந்த இவர், ெதருக்கூத்தில் தொடங்கி திரைப்படங்களில் நுழைந்துள்ளார். பகலில் விவசாயமும் இரவில் தெருக் கூத்து கலைஞராகவும் மாறிய தமது தந்தையைப் பார்த்து வளர்ந்ததில், அது தம்மையும் ஒரு கலைஞனாக செதுக்கியது என்றார் அவர்.
"தமிழ் முரசு நாளிதழை தோற்றுவித்த அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி, மறைந்த முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் திரு லீ குவான் இயூ ஆகியோர் சிங்கையில் தமிழ் மொழிக்காக ஆற்றிய பங்கு பற்றி ஆழமாக அறிந்து கொண்டேன். சிங்கப்பூர் மக்களோடு தெருக்கூத்து கலையை பகிர்ந்துகொள் வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று திரு த.ராமலிங்கம் கூறினார்.