கொவிட்-19 காலத்திலும் தீபாவளிக் கொண்டாட்ட உணர்வை மக்களுக்கு ஏற்படுத்த முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இந்திய மரபுடைமை நிலையத்தில் வண்ண அலங்காரங்கள் பளிச்சென காணப்படுகின்றன. தீபாவளி தொடர்பான மரபுகளை விளக்கும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
கிளைவ் ஸ்த்ரீட்டில் நேற்று நூறாயிரம் வாடாத வண்ணப் பூக்கள் தீபாவளி அலங்காரமாக நேற்று மலர்ந்தன.
லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கம், மக்கள் கழக நற்பணிப் பேரவை ஆகியவற்றுடன் திருமதி விஜயா மோகன் தலைமையிலான தொண்டூழியர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சி இது. 55 சமூக மன்றங்களின் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள், 15 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இவற்றைத் தயாரித்தனர்.
பழைய செய்தித்தாட்கள் பூக்களாக வடிவமைக்கப்பட்டு பின்னர் அவற்றுக்கு வண்ணம் பூசப்பட்டது. சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இம்முயற்சி இடம்பிடித்துள்ளது.
நேற்று அலங்காரப் பூக்களை வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர்.
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கம்.