ஓய்வுக்காலத்திலும் தொடரும் அறப்பணிக்கு உயரிய விருது

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமான நிறு­வ­னத்­தில் 40 ஆண்­டு­களுக்கு மேலாக சேவை­யாற்­றி­ய­வர் ஓய்­வு­பெற்ற விமானி திரு சுரே‌ஷ் மேனன். ஓய்வுபெற்ற பிறகு ஆத­ரவு தேவைப்­படும் பிள்­ளை­க­ளுக்கு நேரம் ஒதுக்க வேண்­டும் என்ற எண்­ணம் கொண்­டார் அவர்.

சிங்­கப்­பூர் சிறு­வர் சங்­கத்­தின் நிர்­வா­கக் குழு­வில் 1997ஆம் ஆண்­டில் உறுப்­பி­ன­ரா­கச் சேர்ந்­தார்.

சிறு­வர் சங்­கத்­திற்­காக நிதி திரட்­டு­வது, ஆண்­டுக்கு இரு­முறை­யா­வது சிறு­வர் நிகழ்ச்­சி­கள் அல்­லது நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஏற்­பாடு செய்­வது போன்­ற­வற்­றில் அவ­ரின் கவ­னம் இருந்­தது.

சிறு­வர்­களை சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னிப் பயிற்சி நிலை­யத்­திற்கு அழைத்­துச் சென்று, பாவனை விமா­னச் சூழ­லில் அவர்­களைப் பறக்­க­வி­டச் செய்­யும் அரிய அனு­ப­வத்தை நிர்­வாக உறுப்­பி­ன­ரான திரு சுரே‌ஷ் ஏற்­ப­டுத்­தித் தந்­தார்.

மற்ற பங்­கா­ளி­க­ளின் உத­வி­யுடன் அமெ­ரிக்க போர் கப்­ப­லி­னுள் நுழைந்து பார்­வை­யி­டும் அனு­ப­வத்­தை­யும் அவர் ஏற்­ப­டுத்­தித் தந்­தார். இது சிறு­வர்­க­ளுக்­குப் பெரும் உற்­சா­கத்­தைத் தந்­தது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கட்­டுப்­பா­டு­க­ளால் சிறு­வர் சங்­கத்­தின்­கீழ் இயங்­கும் சன்­பீம் பிளேஸ் இல்­லச் சிறா­ருக்கு வெளியே செல்­லும் சுதந்­தி­ரம் பறி­போன உணர்வு வர­லாம் என்று கூறிய திரு சுரே‌ஷ், அவர்களுக்கு இயன்ற உத­வி­யைச் சங்­கம் புரிந்து வரு­கிறது என்­றார்.

இந்த இல்­லத்­தில் தற்­போது 42 சிறு­வர்­கள் உள்­ள­னர். பெரும்பாலும் குடும்பத்தால் புறக்­க­ணிக்­கப்­பட்ட அல்­லது துன்­பு­றுத்­த­லுக்கு ஆளான பிள்­ளை­கள் இங்கு வசிக்­கின்­ற­னர்.

கட்­டுப்­பா­டு­க­ளின் அவ­சி­யத்தை சிறு­வர்­க­ளி­டையே சங்க உறுப்­பினர்­கள் வலி­யு­றுத்தி வரும் அதே­வேளை­யில் சிறு­வர்­க­ளின் மன­ந­ல­னுக்­கா­க­வும் பாடு­ப­டு­கின்­ற­னர்.

சிறு­வர்­க­ளைக் குறிப்­பிட்ட ஓர் எண்­ணிக்­கை­யில் வாக­னத்­தில் ஏற்­றி­க்கொண்டு சிங்­கப்­பூரை வலம்­வரும் முயற்­சி­கள் நடந்து வரு­கின்­றன.

ஒரு­முறை விமானி ஒரு­வ­ரி­டம் பேச வேண்­டும் என்று சிறு­வர் ஒரு­வர் விரும்பினார். மெய்­நி­கர் தொடர்­பு­வழி, அச்­சிறு­வனிடம் விமானி ஆவது எப்­படி என்று தாம் பகிர்ந்து­கொண்­ட­தாக 67 வயது திரு சுரே‌ஷ் நினை­வு­கூர்ந்­தார்.

"இங்­கி­ருக்­கும் சிறு­வர்­கள் பிற்­கா­லத்­தில் தங்­க­ளின் குடும்­பத்­து­டன் பாது­காப்­பான முறை­யில் இணைய வேண்­டும். அல்­லது வளர்ப்­புப் பெற்­றோ­ரால் பரா­ம­ரிக்­கப்­பட வேண்­டும் என்­பதே எங்­களது விருப்­பம்.

"இவர்­க­ளுக்­கான ஒரு வலு­வான ஆத­ர­வுக் கட்­ட­மைப்பு இருக்க, அதில் ஒரு சிறிய பங்­கினை என்­னால் ஆற்ற முடிந்­த­தில் மனநிறைவு அடை­கி­றேன்," என்று கூறி­னார் திரு சுரேஷ்.

சிறுவர் சங்கத்தின் உயரிய 'ரூத் வோங்' தொண்­டூ­ழிய விருது இவருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. குறைந்­தது 10 ஆண்டு­கள் தலை­சி­றந்த தொண்­டூ­ழி­யப் பணி­கள் ஆற்­றி­ய­வர்­களை கௌர­விக்க இவ்­வி­ருது வழங்­கப்­ப­டு­கிறது.

விருதை சங்­கத்­தின் புர­வ­ல­ரான அதி­பர் திரு­வாட்டி ஹலிமா யாக்­கோப்­பி­ட­மி­ருந்து திரு சுரே‌ஷ் பெற்­றுக்­கொண்­டார்.

செய்தி: ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!