கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவிலிலும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.
36 வயது குணசேகரனுக்கும் சித்ராவுக்கும் இது கரும்புபோல தித்திக்கும் நம்பிக்கைப் பொங்கல் திருநாள்.
இந்த தம்பதிக்கு திருமணமாகி பத்தாண்டுகள் ஆகிறது.
ஆனால் இதுதான் இவர்கள் குடும்பமாக ஒன்றாக ஒரே இடத்தில் சேர்ந்திருக்கும் இரண்டாவது பொங்கல் திருநாள்.
வேலை இவர்களை வெவ்வேறு இடங்களில் அலைக்கழித்தது அதற்குக் காரணம்.
குடும்பத்தில் புதிய வரவை எதிர்பார்ப்பதால் அவர்களுக்கும் அவர்களின் 5 வயது மகள் விக்னஸ்ரீக்கு கூடுதல் மகிழ்ச்சி.