குடும்ப உறுப்பினர்களும் சமுதாயமும் தரும் ஆதரவால் கடந்த ஆண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு ஆணைக்கு உள்ளானோ ரில் 87 விழுக்காட்டினர் ஆணை விதிகளை முழுமையாகக் கடைப் பிடித்தனர். கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்த விகிதமே ஆக அதிகம் என்று நன்னடத்தைக் கண்காணிப்பு மற்றும் சமூக மறுவாழ்வு சேவைப் பிரிவின் அறிக்கை தெரிவிக்கிறது. அந்த அறிக்கையை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இம்மாதத் தொடக்கத்தில் வெளியிட்டது.
நன்னடத்தைக் கண்காணிப்பு ஆணையை நிறைவேற்றுபவர்
களுக்கு சமூகத்தில் பங்காற்றுவதற்கான வாய்ப்புகளை அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர்.
குறிப்பாக, சமூக சேவை வழி நல்ல முன்மாதிரிகளை அறி
முகப்படுத்தி, ஆணையை நிறைவேற்றுவோரின் பொறுப்புணர்வை வளர்க்க அவர்கள் உதவுகின்றனர்.
கடந்தாண்டு கொவிட்-19 கிரு மிப் பரவலால் இந்த ஆணையை நிறைவேற்றுவோர் வெளி இடங்களில் நேரம் செலவழிப்பது குறைந்ததாகவும் வீட்டுக்குள்ளே அவர்கள் அதிக நேரம் இருந்தது குடும்பப் பிணைப்பை வலுப்படுத்தும் வாய்ப்பை அதிகரித்ததாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
நன்னடத்தைக் கண்காணிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டாலும் தனிநபர்களை சரியான பாதையில் இட்டுச் செல்வது குடும்பமே என்றது அறிக்கை.
தவறு செய்வோரைத் திருத்த அனைத்துத் தரப்பினருமே முயன்றாலும் சில நேரங்களில் கண்காணிப்பு ஆணை பலனளிக்காது என்றார் ஏழு ஆண்டுகளாக நன்னடத்தைக் கண்காணிப்பு அதிகாரியாகப் பணியாற்றும் திவ்யா பிள்ளை, 32, (படம்) தமிழ் முரசி டம் தெரிவித்தார்.
பெரியவர்களாக மாறும் இளையர்களுக்கு சிறந்த முன்னுதாரணம் தேவை எனக் கூறும் இவர், நன்னடத்தைக் கண்காணிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டோருக்கு குடும்பத்தினரும் சமுதாயமும் ஆதரவுத் தூண்களாக இருக்கவேண்டும் என்றார்.
“சமூகத்தில் இவர்களை அங்கத்தினர்களாகச் சேர்க்கும்போது பிறரால் மதிக்கப்படுவதை இவர்கள் உணர்கின்றனர். இந்த உணர்வே இவர்கள் மீண்டும் குற்றம் புரிவதைத் தடுத்து புதிய மனிதர்களாக்கும்.
“நன்னடத்தைக் கண்காணிப்பு ஆணையின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாதவர்கள் நீதிமன்றத்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்படலாம்; மீண்டும் தண்டிக்கப்படலாம்.
“இத்தகையோர் மாறத் தவறும்போதும் அதற்கான காரணங்கள் என்னென்ன, அவற்றைத் தீர்க்க வழி என்ன என்பதை ஆராய்வது முக்கியம்.
“என்னைப் போன்ற நன்ன டத்தைக் கண்காணிப்பு அதிகாரிகள் வழிகாட்டும் அதேநேரம் முக்கியமான சேவைகளை அவர்கள் பெற உதவுவது, திறன் மேம்பாட்டில் உதவுவது போன்றவற்றின் மூலம் அவர்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம்,” என்றார் குமாரி திவ்யா.