அமெரிக்க ஆகாயப்படை நடத்திய 'சிவப்புப் கொடி-அலாஸ்கா' பயிற்சியில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் 'பீஸ் கார்வின் வி (PC V)' பிரிவைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட ஆகாயப்படை வீரர்கள் 'F-15SG' ரக போர் விமானங்களுடன் கலந்துகொண்டனர்.
அலாஸ்கா மாநிலத்தின் ஐயெல்சன் ஆகாயப்படை விமானத்தளத்தில் ஜூன் 9ஆம் தேதிமுதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெற்ற இந்நடவடிக்கையில் அமெரிக்க ஆகாயப்படையின் 'F-18', 'F-16', 'EA-18G', 'A-10' ரக போர் விமானங்கள் உட்பட 80க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்கேற்றன. இரு ஆகாயப்படைகளும் தத்ரூபமான போர் சூழல்
களிலும் மாதிரி போர்ப் பயிற்சி
களிலும் கலந்துகொண்டு தங்கள் போர்க்கால தயார்நிலையையும் செயல்பாட்டு தகுதிகளையும் மேம்படுத்திக்கொண்டன.
இந்தப் பயிற்சியில் முதல் முறையாகக் கலந்துகொண்ட ஆகாயப்படை பொறியாளரான ME2 பிரினைஷ் பிராயன் தேவ
ராஜன் தமது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
"புலம், நீராற்றலால் இயங்கும் அமைப்புகளில் நான் வேலை செய்ததோடு அனைத்து போர் விமானங்களும் எப்போதும் பறப்
பதற்குத் தயாரான நிலையில் இருப்பதை உறுதி செய்யவேண்டி இருந்ததால் இப்பயிற்சி மிகவும் தீவிரமான ஒன்றாக அமைந்தது. ஆனால், அமெரிக்கப் பிரிவுகளுடன் பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்தது," என்று பிரினைஷ் கூறினார்.
'கோப் தண்டர்' பயிற்சி என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த 'சிவப்புக் கொடி - அலாஸ்கா' போர்ப் பயிற்சியில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படை 1984ஆம் ஆண்டிலிருந்து பங்கேற்று வருகிறது.