தேவையான பொருட்கள்:
மூங்கில் அரிசி - 100 கிராம்
தேங்காய்ப்பால் - 200 மி.லி.
கருப்பட்டி - 150 கிராம்
சுக்கு - சிறிய துண்டு
ஏலக்காய் - 3
தண்ணீர் 500 மி.லி.
செய்முறை:
- மூங்கில் அரிசியை வாசனை வரும்வரை வறுத்து ரவை பதத்துக்குப் பொடித்துக் கொள்ளவும். சுக்கு, ஏலக்காயை லேசாக வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
- கருப்பட்டியை 200 மி.லி. தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும்.
- அடி கனமான பாத்திரத்தில் 300 மி.லி. தண்ணீரை ஊற்றி அதில் பொடித்த மூங்கில் அரிசியைச் சேர்த்து 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும். அதில் கருப்பட்டி கரைசலை ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும்.
- பின்னர் அத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வந்ததும் சுக்கு-ஏலக்காய் பொடியைத் தூவி இறக்கவும்.
- மூங்கில் அரிசி தேங்காய்ப்பால் கஞ்சி தயார். மிதமான சூட்டில் கஞ்சியைப் பருகலாம்.