புதிதாக 16 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று

இதற்கிடையே நாளை முதல் (மே 13ஆம் தேதி) ஜூவல் சாங்கி விமான நிலையம் இரு வாரங்களுக்கு மூடப்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் இன்றைய நிலவரப்படி மேலும் 16 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

அவர்களில் 10 பேருக்கு சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தப் பத்து பேரில் ஏழு பேர் சாங்கி விமான நிலையத்தின் கொவிட்-19 குழுமத்துடன் தொடர்புடையவர்கள். இக்குழுமத்தில் இதுவரை மொத்தம் 25 பேர் உள்ளனர்.

சமூக அளவில் பாதிக்கப்பட்ட இருவர் ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள்.

சமூக அளவில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில்லாதவர்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 61,419ஆக அதிகரித்துள்ளது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 11 குழுமங்கள் உள்ளன.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று நேற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஆறு பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அல்லது தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.

#கொவிட்-19
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!