புதிதாக 16 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று
சிங்கப்பூரில் இன்றைய நிலவரப்படி மேலும் 16 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர்களில் 10 பேருக்கு சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்தப் பத்து பேரில் ஏழு பேர் சாங்கி விமான நிலையத்தின் கொவிட்-19 குழுமத்துடன் தொடர்புடையவர்கள். இக்குழுமத்தில் இதுவரை மொத்தம் 25 பேர் உள்ளனர்.
சமூக அளவில் பாதிக்கப்பட்ட இருவர் ஏற்கெனவே கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள்.
சமூக அளவில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில்லாதவர்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 61,419ஆக அதிகரித்துள்ளது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 11 குழுமங்கள் உள்ளன.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று நேற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஆறு பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அல்லது தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை.