கொவிட்-19: ஹாங்காங்கில் இரண்டாவது மரணம்
ஹாங்காங்கில் கொவிட்-19 என்னும் புதிய கொரோனா கிருமி தொற்றுக்கு ஆளான முதியவர் ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார் என அதிகாரிகள் அறிவித்தனர். மாண்டவரையும் சேர்த்து இதுவரை அங்கு இரண்டு பேர் கொரோனா கிருமித் தொற்றுக்கு மாண்டுள்ளனர்.
கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட 70 வயதான அந்த ஆடவர் மோசமான நிலையில் இருந்ததாகவும் அவர் நேற்று ஹாங்காங்கின் பிரின்சஸ் மார்கிரேட் மருத்துவமனையில் காலமானார் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி உடல்நிலை குன்றிய நிலையில் தம் வீட்டில் கீழே விழுந்ததை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவச் சோதனையில், அவர் காய்ச்சலுடன் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.